Kural 942

Thiru Kural 942

Chapter 95: மருந்து

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

Marundhena Ventaavaam Yaakkaikku Arundhiyadhu

Atradhu Potri Unin

English Translation

After digestion one who feeds His body no medicine needs

Couplet

No need of medicine to heal your body's pain,If, what you ate before digested well, you eat again

Explanation

No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

Solomon Pappaiah

ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

Kalaignar

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை