Chapter 95

மருந்து

Marundhu

Medicine

10 kurals

Kural 941 மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
Wind, bile and phlegm three cause disease So doctors deem it more or less
Kural 942 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
After digestion one who feeds His body no medicine needs
Kural 943 அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
Eat food to digestive measure Life in body lasts with pleasure
Kural 944 அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
Know digestion; with keen appetite Eat what is suitable and right
Kural 945 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
With fasting adjusted food right Cures ills of life and makes you bright
Kural 946 இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
Who eats with clean stomach gets health With greedy glutton abides ill-health
Kural 947 தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
who glut beyond the hunger's fire Suffer from untold diseases here
Kural 948 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
Test disease, its cause and cure And apply remedy that is sure
Kural 949 உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
Let the skilful doctor note The sickmen, sickness, season and treat
Kural 950 உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து.
Patient, doctor, medicine and nurse Are four-fold codes of treating course