Kural 948

Thiru Kural 948

Chapter 95: மருந்து

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

Noinaati Noimudhal Naati Adhudhanikkum

Vaainaati Vaaippach Cheyal

English Translation

Test disease, its cause and cure And apply remedy that is sure

Couplet

Disease, its cause, what may abate the ill:Let leech examine these, then use his skill

Explanation

Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

Solomon Pappaiah

நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.

Kalaignar

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)