Kural 958

Thiru Kural 958

Chapter 96: குடிமை

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்.

Nalaththinkan Naarinmai Thondrin Avanaik

Kulaththinkan Aiyap Patum

English Translation

If manners of the good are rude People deem their pedigree crude

Couplet

If lack of love appear in those who bear some goodly name,'Twill make men doubt the ancestry they claim

Explanation

If one of a good family betrays want of affection, his descent from it will be called in question

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

Solomon Pappaiah

நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.

Kalaignar

என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்