Chapter 96

குடிமை

Kutimai

Nobility

10 kurals

Kural 951 இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
Right-sense and bashfulness adorn By nature only the noble-born
Kural 952 ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
The noble-born lack not these three: Good conduct, truth and modesty
Kural 953 நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
Smile, gift, sweet words and courtesy These four mark true nobility
Kural 954 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
Even for crores, the noble mood Cannot bend to degrading deed
Kural 955 வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
The means of gift may dwindle; yet Ancient homes guard their noble trait
Kural 956 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும் என் பார்.
Who guard their family prestige pure Stoop not to acts of cunning lure
Kural 957 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மத஧க்கண் மறுப்போல் உயர்ந்து.
The faults of nobly-born are seen Like on the sky the spots of moon
Kural 958 நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
If manners of the good are rude People deem their pedigree crude
Kural 959 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
Soil's nature is seen in sprout The worth of birth from words flow out
Kural 960 நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
All gain good name by modesty Nobility by humility