Chapter 19

புறங்கூறாமை

Purangooraamai

Not Backbiting

10 kurals

Kural 181 அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
Though a man from virtue strays, To keep from slander brings him praise
Kural 182 அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
Who bite behind, and before smile Are worse than open traitors vile
Kural 183 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
Virtue thinks it better to die, Than live to backbite and to lie
Kural 184 கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.
Though harsh you speak in one's presence Abuse is worse in his absence
Kural 185 அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
Who turns to slander makes it plain His praise of virtue is in vain
Kural 186 பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
His failings will be found and shown, Who makes another's failings known
Kural 187 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
By pleasing words who make not friends Sever their hearts by hostile trends
Kural 188 துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
What will they not to strangers do Who bring their friends' defects to view?
Kural 189 அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
The world in mercy bears his load Who rants behind words untoward
Kural 190 ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
No harm would fall to any man If each his own defect could scan