Chapter 40

கல்வி

Kalvi

Learning

10 kurals

Kural 391 கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
Lore worth learning, learn flawlessly Live by that learning thoroughly
Kural 392 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
Letter, number, art and science Of living kind both are the eyes
Kural 393 கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
The learned alone have eyes on face The ignorant two sores of disgrace
Kural 394 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
To meet with joy and part with thought Of learned men this is the art
Kural 395 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
Like poor before rich they yearn: For knowledge: the low never learn
Kural 396 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
As deep you dig the sand spring flows As deep you learn the knowledge grows
Kural 397 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
All lands and towns are learner's own Why not till death learning go on!
Kural 398 ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
The joy of learning in one birth Exalts man upto his seventh
Kural 399 தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
The learned foster learning more On seeing the world enjoy their lore
Kural 400 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
Learning is wealth none could destroy Nothing else gives genuine joy