Chapter 59

ஒற்றாடல்

Otraatal

Detectives

10 kurals

Kural 581 ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
A king should treat these two as eyes The code of laws and careful spies
Kural 582 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.
All that happens, always, to all The king should know in full detail
Kural 583 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.
Conquests are not for the monarch Who cares not for the Spy's remark
Kural 584 வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
His officers, kinsmen and foes Who watch keenly are worthy spies
Kural 585 கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
Fearless gaze, suspectless guise Guarding secrets mark the spies
Kural 586 துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.
Guised as monks they gather secrets They betray them not under threats
Kural 587 மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
A spy draws out other's secrets Beyond a doubt he clears his facts
Kural 588 ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
The reports given by one spy By another spy verify
Kural 589 ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.
Engage the spies alone, apart When three agree confirm report
Kural 590 சிறப்பறிய ஒற்ற஧ன்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
Give not the spy open reward It would divulge the secret heard!