ஊர்வலமாக மாப்பிள்ளை பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Arasilangkumari (1961) (அரசிளங்குமரி)
Music
G. Ramanathan
Year
1961
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
சேர்ந்து வருகுறார் வண்டியிலே
யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார்
என்ன சேதியோ தெரியல

வெட்கத்தாலே பெண்ணின் முகத்திலே
இட்ட மஞ்சளும் சிவக்குது
பட்டுக் கைவிரல் பட்டதுமே
அவள் பளிங்கு விழிகள் ஏன் தவிக்குது
ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
சேர்ந்து வருகுறார் வண்டியிலே
யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார்
என்ன சேதியோ தெரியல

விறகு வெட்டியிடம் வீணை கிடைத்தால்
குருடன் கையிலே கவிதை கொடுத்தால்
இருவரும் தவிப்பது அதிசயமா
இது இவருக்கும் பொருந்திடும் உவமையம்மா