நாம் ஒன்று சேரும் பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Gouravam (2013) (கௌரவம்)
Music
S. Thaman
Year
2013
Singers
Haricharan, Madhan Karky, Suchitra
Lyrics
Madhan Karky
நாம் ஒன்று சேரும் நேரம்
புது சக்தி வந்து சேரும்
இனி அத்தனையும் மாறும்


ஒன்றாய் ஒன்றாய் ஒன்றாய்
நாம் சேரும் இந்த நேரம்
எங்கள் மூச்சில் பெருகும்
அந்தச் சூட்டில் இந்த பூமி உருகும்
உண்மை தட்டிக் கேட்க வந்தோம்
கொஞ்சம் முட்டிப் பார்க்க வந்தோம்

நீ எங்கோ நான் எங்கோ
ஒன்றாக சிந்தித்தோம் அன்று
தோழியே என் தோழனே!

நீ எங்கோ நான் எங்கோ
கோபத்தை சேமித்தோம் அன்று
தோழியே என் தோழனே!

எண்ணங்கள் ஒன்றாகி
கோபங்கள் சேர்ந்தாச்சு இன்று
தோழியே என் தோழனே!

அட பனிப் பனித் துளியெல்லாம்
திரண்டிடும் போதும்
அலை உருண்டிடும் போதும்
அதில் பயன் ஒன்று ஏது?

மலை என எழும் அலை
அடித்திடும் வரை
அக் கல்லில் செய்த
நெஞ்சம் ஒன்றும் நகர்வதில்லை

அட தனித் தனிப் பொறிகளும்
இணைந்திடும் போதும்
ஒளி தெரிந்திடும் போதும்
ஒரு வழி மட்டும் காட்டிவிட்டு
அடங்கிடுமா?
ஹே அணைந்திடுமா?
ஒரு தீப்பிழம்பாய் நாம் கிளம்ப ஒன்றாவோம்!

ஊருக்கு ஒன்றென்றால்
நாம் என்ன செய்வது என்று
ஓடினோம் அன்று ஓடினோம்

உண்மைக்குப் பக்கத்தில்
தோளோடு தோள் நின்று இன்று
தேடினோம் பதில் தேடினோம்

வெறும் அரட்டைக்குப் பயன்பட்ட
இணையத்துத் தளம்
இன்று புரட்சியின் களம்
அதில் விதை ஒன்று போட்டால்
முளைத்திடும் காடு
அதன் பரவலைப் பாரு
இதைத் தடுத்திட
ஒருவனும் இங்கில்லை

வெறும் திரையறை கடற்கரை
என இருந்தோமே
எங்கள் பொருள் மறந்தோமே
எங்கள் திறம் என்ன நிறம் என்ன
தெளிவடைந்தோம்
இன்று கடல் கடைந்தோம்
அட கிடைப்பது
என்னவென்று காண்போமே....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.