Kural 1050

Thiru Kural 1050

Chapter 105: நல்குரவு

துப்புர வில்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

Thuppura Villaar Thuvarath Thuravaamai

Uppirkum Kaatikkum Kootru

English Translation

Renounce their lives the poor must Or salt and gruel go to waste

Couplet

Unless the destitute will utterly themselves deny,They cause their neighbour's salt and vinegar to die

Explanation

The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

Solomon Pappaiah

உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.

Kalaignar

ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு