Chapter 105

நல்குரவு

Nalkuravu

Poverty

10 kurals

Kural 1041 இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
What gives more pain than scarcity? No pain pinches like poverty
Kural 1042 இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
The sinner Want is enemy dire Of joys of earth and heaven there
Kural 1043 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.
The craving itch of poverty Kills graceful words and ancestry
Kural 1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
Want makes even good familymen Utter words that are low and mean
Kural 1045 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
The pest of wanton poverty Brings a train of misery
Kural 1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
The poor men's words are thrown away Though from heart good things they say
Kural 1047 அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
Even the mother looks as stranger The poor devoid of character
Kural 1048 இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
The killing Want of yesterday Will it pester me even to-day?
Kural 1049 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
One may sleep in the midst of fire In want a wink of sleep is rare
Kural 1050 துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
Renounce their lives the poor must Or salt and gruel go to waste