Kural 1046

Thiru Kural 1046

Chapter 105: நல்குரவு

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்.

Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar

Sorporul Sorvu Patum

English Translation

The poor men's words are thrown away Though from heart good things they say

Couplet

Though deepest sense, well understood, the poor man's words convey,Their sense from memory of mankind will fade away

Explanation

The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

Solomon Pappaiah

நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

Kalaignar

அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்