Kural 1049

Thiru Kural 1049

Chapter 105: நல்குரவு

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது.

Neruppinul Thunjalum Aakum Nirappinul

Yaadhondrum Kanpaatu Aridhu

English Translation

One may sleep in the midst of fire In want a wink of sleep is rare

Couplet

Amid the flames sleep may men's eyelids close,In poverty the eye knows no repose

Explanation

One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

Solomon Pappaiah

யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.

Kalaignar

நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்