Kural 1056

Thiru Kural 1056

Chapter 106: இரவு

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்.

Karappitumpai Yillaaraik Kaanin Nirappitumpai

Ellaam Orungu Ketum

English Translation

The pain of poverty shall die Before the free who don't deny

Couplet

It those you find from evil of 'denial' free,At once all plague of poverty will flee

Explanation

All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

Solomon Pappaiah

இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.

Kalaignar

இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்