Kural 291

Thiru Kural 291

Chapter 30: வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum

Theemai Ilaadha Solal

English Translation

If "What is truth"? the question be, It is to speak out evil-free

Couplet

You ask, in lips of men what 'truth' may be;'Tis speech from every taint of evil free

Explanation

Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

Solomon Pappaiah

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

Kalaignar

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்