Chapter 30

வாய்மை

Vaaimai

Veracity

10 kurals

Kural 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
If "What is truth"? the question be, It is to speak out evil-free
Kural 292 பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
E'en falsehood may for truth suffice, When good it brings removing vice
Kural 293 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
Let not a man knowingly lie; Conscience will scorch and make him sigh
Kural 294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
He lives in loving hearts of all Who serves the Truth serene in soul
Kural 295 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
To speak the truth from heart sincere Is more than giving and living austere
Kural 296 பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
Not to lie brings all the praise All virtues from Truth arise
Kural 297 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
Lie not lie not Naught else you need All virtues are in Truth indeed
Kural 298 புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
Water makes you pure outward Truth renders you pure inward
Kural 299 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
All lights are not lights for the wise; Truth light is light bright like Sun-light
Kural 300 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
Of all the things we here have seen Nothing surpasses Truth serene!