Kural 293

Thiru Kural 293

Chapter 30: வாய்மை

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

Thannenj Charivadhu Poiyarka Poiththapin

Thannenje Thannaich Chutum

English Translation

Let not a man knowingly lie; Conscience will scorch and make him sigh

Couplet

Speak not a word which false thy own heart knowsSelf-kindled fire within the false one's spirit glows

Explanation

Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

Solomon Pappaiah

பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.

Kalaignar

மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்