Kural 334

Thiru Kural 334

Chapter 34: நிலையாமை

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்.

Naalena Ondrupor Kaatti Uyir

Eerum Vaaladhu Unarvaarp Perin

English Translation

The showy day is but a saw Your life, know that, to file and gnaw

Couplet

As 'day' it vaunts itself; well understood, 'tis knife',That daily cuts away a portion from thy life

Explanation

Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

Solomon Pappaiah

நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.

Kalaignar

வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்