Kural 436

Thiru Kural 436

Chapter 44: குற்றங்கடிதல்

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு?

Thankutram Neekkip Pirarkutrang Kaankirpin

Enkutra Maakum Iraikku?

English Translation

What fault can be the king's who cures First his faults, then scans others

Couplet

Faultless the king who first his own faults cures, and thenPermits himself to scan faults of other men

Explanation

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.

Solomon Pappaiah

முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!

Kalaignar

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?