Chapter 44

குற்றங்கடிதல்

Kutrangatidhal

The Correction of Faults

10 kurals

Kural 431 செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
Plenty is their prosperity Who're free from wrath pride lust petty
Kural 432 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
Mean pride, low pleasure, avarice These add blemishes to a prince
Kural 433 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
Though millet-small their faults might seem Men fearing disgrace, Palm-tall deem
Kural 434 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
Watch like treasure freedom from fault Our fatal foe is that default
Kural 435 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
Who fails to guard himself from flaw Loses his life like flame-lit straw
Kural 436 தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?
What fault can be the king's who cures First his faults, then scans others
Kural 437 செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
That miser's wealth shall waste and end Who would not for a good cause spend
Kural 438 பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
The gripping greed of miser's heart Is more than fault the worst apart
Kural 439 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
Never boast yourself in any mood Nor do a deed that does no good
Kural 440 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
All designs of the foes shall fail If one his wishes guards in veil