Kural 432

Thiru Kural 432

Chapter 44: குற்றங்கடிதல்

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு.

Ivaralum Maanpirandha Maanamum Maanaa

Uvakaiyum Edham Iraikku

English Translation

Mean pride, low pleasure, avarice These add blemishes to a prince

Couplet

A niggard hand, o'erweening self-regard, and mirthUnseemly, bring disgrace to men of kingly brith

Explanation

Avarice, undignified pride, and low pleasures are faults in a king

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.

Solomon Pappaiah

நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.

Kalaignar

மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்