Kural 433

Thiru Kural 433

Chapter 44: குற்றங்கடிதல்

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்.

Thinaiththunaiyaang Kutram Varinum Panaiththunaiyaak

Kolvar Pazhinaanu Vaar

English Translation

Though millet-small their faults might seem Men fearing disgrace, Palm-tall deem

Couplet

Though small as millet-seed the fault men deem;As palm tree vast to those who fear disgrace 'twill seem

Explanation

Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.

Solomon Pappaiah

பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.

Kalaignar

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்