Kural 435

Thiru Kural 435

Chapter 44: குற்றங்கடிதல்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

Varumunnark Kaavaadhaan Vaazhkkai Erimunnar

Vaiththooru Polak Ketum

English Translation

Who fails to guard himself from flaw Loses his life like flame-lit straw

Couplet

His joy who guards not 'gainst the coming evil day,Like straw before the fire shall swift consume away

Explanation

The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

Solomon Pappaiah

தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.

Kalaignar

முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்