Kural 530

Thiru Kural 530

Chapter 53: சுற்றந் தழால்

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத் திருந்து எண்ணிக் கொளல்.

Uzhaippirindhu Kaaranaththin Vandhaanai Vendhan

Izhaith Thirundhu Ennik Kolal

English Translation

Who leaves and returns with motive The king should test him and receive

Couplet

Who causeless went away, then to return, for any cause, ask leave;The king should sift their motives well, consider, and receive

Explanation

When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.

Solomon Pappaiah

ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.

Kalaignar

ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்