வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி.
Vaanokki Vaazhum Ulakellaam Mannavan
Kol Nokki Vaazhung Kuti
English Translation
The earth looks up to sky and thrives And mankind to king's rod of justice
Couplet
All earth looks up to heav'n whence raindrops fall;All subjects look to king that ruleth all
Explanation
When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive
Tamil Commentary
Interpretations
Mu. Varadarajan
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
Solomon Pappaiah
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
Kalaignar
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது