Kural 542

Thiru Kural 542

Chapter 55: செங்கோன்மை

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல் நோக்கி வாழுங் குடி.

Vaanokki Vaazhum Ulakellaam Mannavan

Kol Nokki Vaazhung Kuti

English Translation

The earth looks up to sky and thrives And mankind to king's rod of justice

Couplet

All earth looks up to heav'n whence raindrops fall;All subjects look to king that ruleth all

Explanation

When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

Solomon Pappaiah

உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.

Kalaignar

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது