Chapter 55

செங்கோன்மை

Sengonmai

The Right Sceptre

10 kurals

Kural 541 ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
Test and attest impartially Consult and act the laws justly
Kural 542 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி.
The earth looks up to sky and thrives And mankind to king's rod of justice
Kural 543 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
The Sage's scripture and virtue spring From the sceptre of a stately king
Kural 544 குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
The world clings to the ruler's feet Whose sceptre clasps the people's heart
Kural 545 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
Full rains and yields enrich the land Which is ruled by a righteous hand
Kural 546 வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
Not the spear but the sceptre straight That brings success to monarch's might
Kural 547 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
The king protects the entire earth And justice protects his royal worth
Kural 548 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
Hard of access, the unjust king He shall himself his ruin bring
Kural 549 குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
Save his subjects and chide the wrong Is flawless duty of a king
Kural 550 கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
Killing killers, the king, behold Weeds removes from cropful field