Kural 545

Thiru Kural 545

Chapter 55: செங்கோன்மை

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு.

Iyalpulik Kolochchum Mannavan Naatta

Peyalum Vilaiyulum Thokku

English Translation

Full rains and yields enrich the land Which is ruled by a righteous hand

Couplet

Where king, who righteous laws regards, the sceptre wields,There fall the showers, there rich abundance crowns the fields

Explanation

Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

Solomon Pappaiah

அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.

Kalaignar

நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்