Kural 543

Thiru Kural 543

Chapter 55: செங்கோன்மை

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.

Andhanar Noorkum Araththirkum Aadhiyaai

Nindradhu Mannavan Kol

English Translation

The Sage's scripture and virtue spring From the sceptre of a stately king

Couplet

Learning and virtue of the sages spring,From all-controlling sceptre of the king

Explanation

The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

Solomon Pappaiah

அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.

Kalaignar

ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்