Kural 683

Thiru Kural 683

Chapter 69: தூது

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு.

Noolaarul Noolvallan Aakudhal Velaarul

Vendri Vinaiyuraippaan Panpu

English Translation

Savant among savants, he pleads Before lanced king, triumphant words

Couplet

Mighty in lore amongst the learned must he be,Midst jav'lin-bearing kings who speaks the words of victory

Explanation

To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

Solomon Pappaiah

அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.

Kalaignar

வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்