Kural 780

Thiru Kural 780

Chapter 78: படைச் செருக்கு

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து.

Purandhaarkan Neermalkach Chaakirpin Saakkaatu

Irandhukol Thakkadhu Utaiththu

English Translation

Such a death shall be prayed for Which draws the the tears of the ruler

Couplet

If monarch's eyes o'erflow with tears for hero slain,Who would not beg such boon of glorious death to gain

Explanation

If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

Solomon Pappaiah

வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.

Kalaignar

தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு