Chapter 78

படைச் செருக்கு

Pataichcherukku

Military Spirit

10 kurals

Kural 771 என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.
Stand not before my chief, O foes! Many who stood, in stones repose
Kural 772 கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
To lift a lance that missed a tusker Is prouder than shaft that hit a hare
Kural 773 பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
Valour is fight with fierce courage Mercy to the fallen is its edge
Kural 774 கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
At the tusker he flings his lance One in body smiles another chance
Kural 775 விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
When lances dart if heroes wink "It is a rout" the world will think
Kural 776 விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
The brave shall deem the days as vain Which did not battle-wounds sustain
Kural 777 சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
Their anklets aloud jingle their name Who sacrifice their life for fame
Kural 778 உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.
The king may chide, they pursue strife; They fear loss of glory; not life
Kural 779 இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
Who will blame the heroes that lose Their lives in war to keep their vows?
Kural 780 புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
Such a death shall be prayed for Which draws the the tears of the ruler