Kural 791

Thiru Kural 791

Chapter 80: நட்பாராய்தல்

நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.

Naataadhu Nattalir Ketillai Nattapin

Veetillai Natpaal Pavarkku

English Translation

Than testless friendship nought is worse For contacts formed will scarcely cease

Couplet

To make an untried man your friend is ruin sure;For friendship formed unbroken must endure

Explanation

As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.

Solomon Pappaiah

விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.

Kalaignar

ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்