Kural 792

Thiru Kural 792

Chapter 80: நட்பாராய்தல்

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

Aaindhaaindhu Kollaadhaan Kenmai Kataimurai

Thaansaam Thuyaram Tharum

English Translation

Friendship made without frequent test Shall end in grief and death at last

Couplet

Alliance with the man you have not proved and proved again,In length of days will give you mortal pain

Explanation

The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.

Solomon Pappaiah

ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.

Kalaignar

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்