Kural 837

Thiru Kural 837

Chapter 84: பேதைமை

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை.

Edhilaar Aarath Thamarpasippar Pedhai

Perunjelvam Utrak Katai

English Translation

Strangers feast and kinsmen fast When fools mishandle fortunes vast

Couplet

When fools are blessed with fortune's bounteous store,Their foes feed full, their friends are prey to hunger sore

Explanation

If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

Solomon Pappaiah

அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.

Kalaignar

அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது