Kural 849

Thiru Kural 849

Chapter 85: புல்லறிவாண்மை

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு.

Kaanaadhaan Kaattuvaan Thaankaanaan Kaanaadhaan

Kantaanaam Thaankanta Vaaru

English Translation

Sans Self-sight in vain one opens Sight To the blind who bet their sight as right

Couplet

That man is blind to eyes that will not see who knowledge shows;-The blind man still in his blind fashion knows

Explanation

One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit"

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.

Solomon Pappaiah

அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.

Kalaignar

அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான் அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்