Chapter 85

புல்லறிவாண்மை

Pullarivaanmai

Ignorance

10 kurals

Kural 841 அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.
Want of wisdom is want of wants Want of aught else the world nev'r counts
Kural 842 அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
When fool bestows with glee a gift It comes but by getter's merit
Kural 843 அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
The self-torments of fools exceed Ev'n tortures of their foes indeed
Kural 844 வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
Stupidity is vanity That cries "We have sagacity"
Kural 845 கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
Feigning knowledge that one has not Leads to doubt ev'n that he has got
Kural 846 அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
Fools their nakedness conceal And yet their glaring faults reveal
Kural 847 அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
The fool that slights sacred counsels Upon himself great harm entails
Kural 848 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
He listens not nor himself knows Plague is his life until it goes
Kural 849 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
Sans Self-sight in vain one opens Sight To the blind who bet their sight as right
Kural 850 உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
To people's "Yes" who proffer "No" Deemed as ghouls on earth they go