Kural 900

Thiru Kural 900

Chapter 90: பெரியாரைப் பிழையாமை

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்

சிறந்தமைந்த சீரார் செறின்.

Irandhamaindha Saarputaiyar Aayinum Uyyaar

Sirandhamaindha Seeraar Serin

English Translation

Even mighty aided men shall quail If the enraged holy seers will

Couplet

Though all-surpassing wealth of aid the boast,If men in glorious virtue great are wrath, they're lost

Explanation

Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.

Solomon Pappaiah

மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.

Kalaignar

என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது