Chapter 17

அழுக்காறாமை

Azhukkaaraamai

Not Envying

10 kurals

Kural 161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
Deem your heart as virtuous When your nature is not jealous
Kural 162 விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
No excellence excels the one That by nature envies none
Kural 163 அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
Who envies others' good fortune Can't prosper in virtue of his own
Kural 164 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
The wise through envy don't others wrong Knowing that woes from evils throng
Kural 165 அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
Man shall be wrecked by envy's whim Even if enemies spare him
Kural 166 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
Who envies gifts shall suffer ruin Without food and clothes with his kin
Kural 167 அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
Fortune deserts the envious Leaving misfortune omnious
Kural 168 அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
Caitiff envy despoils wealth And drags one into evil path
Kural 169 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
Why is envy rich, goodmen poor People with surprise think over
Kural 170 அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
The envious prosper never The envyless prosper ever