Chapter 31

வெகுளாமை

Vekulaamai

Restraining Anger

10 kurals

Kural 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?
Anger against the weak is wrong It is futile against the strong
Kural 302 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
Vain is wrath against men of force Against the meek it is still worse
Kural 303 மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
Off with wrath with any one It is the source of sin and pain
Kural 304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
Is there a foe like harmful ire Which kills the smile and joyful cheer?
Kural 305 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
Thyself to save, from wrath away! If not thyself the wrath will slay
Kural 306 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
Friend-killer is the fatal rage It burns the helpful kinship-barge
Kural 307 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
The wrath-lover to doom is bound Like failless-hand that strikes the ground
Kural 308 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
Save thy soul from burning ire Though tortured like the touch of fire
Kural 309 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
Wishes he gains as he wishes If man refrains from rage vicious!
Kural 310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
Dead are they who are anger-fed Saints are they from whom wrath has fled