சொல்லாதே யாரும் கேட்டால் பாடல் வரிகள்

Last Updated: Jul 14, 2026

Movie Name
Sagalakala Sambanthi (1989) (சகலகலா சம்மந்தி)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Idhaya Chandran
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹேய்
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்

சொல்லாதே ஹேய் யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்...

ஊரு உலகம் ஓயத் துடிக்கிற நேரம்
நாடி நரம்புகள் பாய துடிக்கிற காலம்
வாய் வார்த்தை இப்ப தேவையில்ல
வாதாட இப்ப நேரமில்ல

சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு
வீணாக ஆறிப் போகக் கூடாது
சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு
வீணாக ஆறிப் போகக் கூடாது
எலப் போடாமலே பசிதான் தீருமா
பசி தீராமலே குஷி தான் ஏறுமா ஷ்ஷ்ஏய்...

சொல்லாதே ஹேய் யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்...

பஞ்சு தலையணை கெஞ்சி அழைக்கிற போது
சின்னஞ்சிறுக்கு நித்திரை என்பது ஏது
நூலாடை மெல்ல வெளியேறட்டும்
பூமேனி இன்பக் கதப் பேசட்டும்

பஞ்சாங்கம் பாக்க இப்ப கூடாது
சந்தோஷம் தள்ளி நின்னா வாராது
பஞ்சாங்கம் பாக்க இப்ப கூடாது
சந்தோஷம் தள்ளி நின்னா வாராது

இரு கொடிப் போலவே உடல் விளையாடட்டும்
அதிகாலை வரை காமன் கொடி ஏறட்டும்..ஹாஹ்ஹ்

சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்...

சொல்லாதே யாரும் கேட்டால் ஹாஹாஹ்..ஹேய்..ஹாஹ்
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே..ம்ம்ம்ம்....