என்னை சாய்த்தாளே பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Endrendrum Punnagai (2013) (என்றென்றும் புன்னகை)
Music
Harris Jayaraj
Year
2013
Singers
Thamarai
Lyrics
Thamarai
என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

நேற்று போலே வானம் அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீழும்
தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்

என்னைச் சாய்த்தாளே ....

மாலை வந்தால் போதும் ஒரு நூற்று பத்தில் தேகம்
செங்காந்தள் போல் காயும்
காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை மறைக்கிறேன்
என் பொய்யைப் பூட்டி வைத்துக் கொண்டேன்
கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்

என்னைச் சாய்த்தாளே ....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.