Kural 407

Thiru Kural 407

Chapter 41: கல்லாமை

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை யற்று.

Nunmaan Nuzhaipulam Illaan Ezhilnalam

Manmaan Punaipaavai Yatru

English Translation

Like painted clay-doll is his show Grand subtle lore who fails to know

Couplet

Who lack the power of subtle, large, and penetrating sense,Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence

Explanation

The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

Solomon Pappaiah

நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.

Kalaignar

அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்