Chapter 41

கல்லாமை

Kallaamai

Ignorance

10 kurals

Kural 401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
Like play of chess on squareless board Vain is imperfect loreless word
Kural 402 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
Unlearned man aspiring speech Is breastless lady's love-approach
Kural 403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
Ev'n unread men are good and wise If before the wise, they hold their peace
Kural 404 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
The unread's wit though excellent Is not valued by the savant
Kural 405 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
A man untaught when speech he vaunts Sadly fails before savants
Kural 406 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
People speak of untaught minds "They just exist like barren lands"
Kural 407 நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.
Like painted clay-doll is his show Grand subtle lore who fails to know
Kural 408 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட் ட திரு.
Wealth in the hand of fools is worse Than a learned man's empty purse
Kural 409 மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
Lower are fools of higher birth Than low-born men of learning's worth
Kural 410 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
Like beasts before men, dunces are Before scholars of shining lore