Naan Muthal Muthal Lyrics
நான் முதன் முதல் பாடிய பாட்டு பாடல் வரிகள்
Last Updated: Jan 08, 2026
Movie Name
Thaai Naadu (1989) (தாய் நாடு)
Music
Manoj Gyan Varma
Year
1989
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Aabavanan
நான் முதன் முதல் பாடிய பாட்டு – இங்கு
ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதால்
இருண்ட வாழ்வும் இனி மாறும்...(நான்)
போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா
போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா
கேள்விகள் விடை பெற வேண்டும் – அந்த
விடைகளில் புது யுகம் தோன்றும்
கேட்க மறந்த மனிதா உன்
ஊமை வாழ்வும் இனிதா
அழுதவன் சிரித்திட வேண்டும் – அந்த
சிரிப்பினில் தத்துவம் தோன்றும்
சிரிக்க மறந்த மனிதா நீ
சுமக்கும் பாரம் பெரிதா
தாங்காது இனி தாங்காது புது
போராட்டம் காண நீ ........(முதல்)
கனவுகள் உயிர் பெற வேண்டும் – அது
உயிர் பெற போரிட வேண்டும்
காலம் மீண்டும் வருமா – அது
கனவை மீட்டுத் தருமா
சிறைகளும் உடை படவேண்டும் – அதை
உடைத்திடத் துணிவுகள் வேண்டும்
துணையும் மீண்டும் வருமா – அது
துணிவை மீட்டுத் தருமா
போதாது இது போதாது நீ போராட ஓடி வா..(நான்)
ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதால்
இருண்ட வாழ்வும் இனி மாறும்...(நான்)
போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா
போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா
கேள்விகள் விடை பெற வேண்டும் – அந்த
விடைகளில் புது யுகம் தோன்றும்
கேட்க மறந்த மனிதா உன்
ஊமை வாழ்வும் இனிதா
அழுதவன் சிரித்திட வேண்டும் – அந்த
சிரிப்பினில் தத்துவம் தோன்றும்
சிரிக்க மறந்த மனிதா நீ
சுமக்கும் பாரம் பெரிதா
தாங்காது இனி தாங்காது புது
போராட்டம் காண நீ ........(முதல்)
கனவுகள் உயிர் பெற வேண்டும் – அது
உயிர் பெற போரிட வேண்டும்
காலம் மீண்டும் வருமா – அது
கனவை மீட்டுத் தருமா
சிறைகளும் உடை படவேண்டும் – அதை
உடைத்திடத் துணிவுகள் வேண்டும்
துணையும் மீண்டும் வருமா – அது
துணிவை மீட்டுத் தருமா
போதாது இது போதாது நீ போராட ஓடி வா..(நான்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.