சிங்கார மானே பூந்தேனே பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Thai Mozhi (1992) (தாய்மொழி)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
Mano, Swarnalatha
Lyrics
Gangai Amaran

சிங்கார மானே பூந்தேனே
காவல் நானே செய்து காதல் பண்ணட்டா
ஹொய் ஹொய் ஹொய்

கண்ணான கன்னிப் பூ மாலை
போடும் வேளை கொஞ்சம் மார்பில் கொஞ்சட்டா
ஹொய் ஹொய் ஹொய்

சும்மா நீ பாடாதே கெட்டுப் போகாதே
ஹொய் ஹொய் ஹொய்
தெம்மாங்கு ராகம் தான் விட்டுப் போகாதே
இந்தக் காதல் மோதல் ஓ... ஓ...(சிங்கார)

வானம் பொழியாமல் பூமி குளிராது
நாடும் செழிக்காது பூ விழியே..ஓ... ஓ...
பூமி விளையாமல் எதுவும் நடக்காது
மறந்து போனாயே மலர் விழியே..ஓ... ஓ...

தென்பாண்டியின் தலைவன்
புடவை மடிப்பின் பின் போவதா..ஓ... ஓ...
மன்றாடியே மயங்கி
தவித்து தவித்து திண்டாடவா ஓ... ஓ... ஓ... ஓ...

அடி வாடாமல் நீ எனை வாட்டாதேடி
நான் சூடாமலே தடை போடாதேடி
உனைச் சேராமல் போனால்
ஒரு ராகம் தாளம் ஏதடி.....(சிங்கார)

காதல் வலை போட்டு ஆடும் விளையாட்டு
தோக்குறேன் தோக்குறேன் புரியலையே
பாத்து எதிர் பாத்து ஆச்சு நாள் ஆச்சு
பேச்சு வெறும் பேச்சு சரி இல்லையே

சிங்காரியே இருக்கும்
துணையை வெறுக்க சன்னியாசியா ஆ... ஆ...
அம்மாடியே அதிஷ்டம்
இருக்கு உனக்கு சம்சாரியா ஆ... ஆ... ஆ... ஆ...

என் காதல் மன்னா உன் இடம் மாத்தையா
அட கன்னா பின்னா என புலம்பாதையா
இது மாட்டாது மாமா உன் ரூட்ட மாத்திப் பாடையா
சிங்கார மானே பூந்தேனே......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.