வாடுமோ ஓவியம் பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Puthiya Raagam (1991) (புதிய இராகம்)
Music
Ilaiyaraaja
Year
1991
Singers
Mano, S. Janaki
Lyrics

வாடுமோ.....ஓவியம்.....
ஆ... பாடுமோ காவியம்
ஆ... சந்தோஷம் காணாத உள்ளம்
ஆ... சங்கீதம் கேட்டாலே துள்ளும்

ஒரு ராகம் பாடு போதும்
அதில் சோகம் யாவும் ஓடும்
நலம் காணலாம் தினம்
வாடுமோ ஓவியம்…..

வேரும் வென்னீரும் சேர்ந்தால் என்னாகும்
வாடும் சோலை தான்
காலம் செய்கின்ற கோலம் எல்லாமே
தேவன் லீலை தான்

பாசம் வைத்தாலும் நேசம் வைத்தாலும்
பாவம் தானா சொல்
கங்கை என்றெண்ணி கானல் என்றாக
குற்றம் யார் மேல் சொல்
வீணைக்கேது வாழ்வு மீட்டிடாத போது
ஞானம் இல்லையானால் கானம் இங்கு ஏது

நிஸ்ஸா கரிஸரி ஸரி நிஸா தநி பதா
மபா தஸநித பத மப கம ரிக
நிஸா ரிகம ரிகா மபத
ரிஸா நிதப மகா ரிஸநி……(வாடுமோ)

மாலை முள்ளாக மன்னன் கல்லாக
ஏங்கும் ஜீவன் நான்
தாரம் இல்லாத பாரம் நெஞ்சோடு
தாங்கும் ஜீவன் நான்

ஆற்றில் இந்நேரம் காற்றில் தள்ளாடும்
படகைப் போலே நான்
வாலும் இல்லாத நூலும் இல்லாத
பட்டம் போலே நான்
நானும் நீயும் இன்று போகும் பாதை ஒன்று
வாட்டம் நீங்கி வாழும் வேளை ஒன்று உண்டு

நிஸ்ஸா கரிஸரி ஸரி நிஸா தநி பதா
மபா தஸநித பத மப கம ரிக
நிஸா ரிகம ரிகா மபத
ரிஸா நிதப மகா ரிஸநி.....(வாடுமோ)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.