புதிய நிலாவின் உதயம் பாடல் வரிகள்

Last Updated: Mar 29, 2024

Movie Name
Vizhiyora Kavithai (1988) (விழியோர கவிதை)
Music
Shankar-Ganesh
Year
1988
Singers
K. S. Chitra
Lyrics
Thirupathooran
ஆஆஆ....லலலல....ஆஆஆஆ....
புதிய நிலாவின் உதயம்
சிறகினை விரித்தது இதயம்
விழியின் இமையில் நடனம்
அதிலும் புதுமை நளினம்

வாசங் கொண்ட பூவு ஒண்ணு
ஆடுதய்யா தாகமின்னு

புதிய நிலாவின் உதயம்
சிறகினை விரித்தது இதயம்
விழியின் இமையில் நடனம்
அதிலும் புதுமை நளினம்
தில்லில்லாலா ஆஹஅஹா..

தன்னில் கோடி ராகம் கண்ணில் பாடியது
அது பின்னிய காதல் மாலை மன்னனை தேடியது
பூத்த மலரில் வேர்த்த நினைவை
காத்து நினைத்தால் சேர்த்து அணைத்தால்
இளைய மனம் இனிமைகளை சுவைக்கலாமே

வாசங் கொண்ட பூவு ஒண்ணு
ஆடுதய்யா தாகமின்னு

புதிய நிலாவின் உதயம்
சிறகினை விரித்தது இதயம்
விழியின் இமையில் நடனம்
அதிலும் புதுமை நளினம்
தில்லில்லாலா ஆஹஅஹா..

விண்ணில் ஓடிய மேகம் ஒரு ஜாடை செய்கிறது
வண்ணப் பூக்களை மூட பனி ஆடை நெய்கிறது
மூடி இருக்கும் சிப்பிக்குள்ள முத்து இருந்தால் லாபமில்ல
பயந்தாலும் மறந்தாலும் பருவம் வருமோ

வாசங் கொண்ட பூவு ஒண்ணு
ஆடுதய்யா தாகமின்னு

புதிய நிலாவின் உதயம்
சிறகினை விரித்தது இதயம்
விழியின் இமையில் நடனம்
அதிலும் புதுமை நளினம்

வாசங் கொண்ட பூவு ஒண்ணு
ஆடுதய்யா தாகமின்னு
தில்லில்லாலா ஆஹாஹ்...தில்லிலா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.