Senthamizha Elunthu Lyrics
செந்தமிழா எழுந்து வாராயோ பாடல் வரிகள்
Last Updated: Mar 28, 2023
Movie Name
Madurai Veeran (1956) (மதுரை வீரன்)
Music
G. Ramanathan
Year
1956
Singers
Lyrics
Kannadasan
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
நமது சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே
நின்று தவழ்ந்து மகிழ்ந்த மொழியிதே கடமையோடு உயிரெனக் காவாயோ?
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
அன்பு நெறியிலே அரசாள
இந்த அகிலமெல்லாம் தமிழர் உறவாட
துன்பங்கள் யாவும் பறந்தோட
தூய மனம் கொண்டு கவி பாட
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
நமது சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே
அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே
நின்று தவழ்ந்து மகிழ்ந்த மொழியிதே கடமையோடு உயிரெனக் காவாயோ?
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
அன்பு நெறியிலே அரசாள
இந்த அகிலமெல்லாம் தமிழர் உறவாட
துன்பங்கள் யாவும் பறந்தோட
தூய மனம் கொண்டு கவி பாட
செந்தமிழா எழுந்து வாராயோ
உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.