Song lyrics

Sollamalae Yar Paarthathu Lyrics

சொல்லாமலே யார் பார்த்தது பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
S. A. Rajkumar
Year
1996
Singers
S. A. Rajkumar, Sujatha Mohan
Lyricist
Vairamuthu
Sollamalae Yar Paarthathu

Lyrics

Sollamalae Yar Paarthathu Lyrics

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுக்கின்றதே அடி அது காதல...
தீ குளிர்கின்றதே அடி இது காதலா...
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ.......

நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் செல்லும் பச்சைக்கிளி
முத்தங்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி
(சொல்லாமலே..)

மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முல்லை போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் தூக்கம் கெட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலயா...
உன் பார்வை குற்றால சாரல் மழையா...
அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா...
நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடையா...
இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி
(சொல்லாமலே..)

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
கை சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைக்க
முள்மீது பூவானேன் தேகம் இழக்க
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாதம் சந்தோஷ யுத்தம் நடந்தது
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி
(சொல்லாமலே..)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people